Total Pageviews

Friday 1 March 2013

BUDGET NEWS 2013-2014

நாட்டுடைமையாக்கப்பட்ட 13 வங்கிகளின் நிதியாதாரத்தைப் பெருக்க மார்ச் 2013-க்குள் ரூ.12,517 கோடியும், 2013-14-க்குள் மேலும் ரூ.14,000 கோடியும் அளித்து நிதியாதாரத்தை மேம்படுத்தவுள்ளனர். அஞ்சல்துறை அலுவலகங்களை தகவல் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்க ரூ.4,909 கோடியும், அஞ்சல் துறையை "கோர் பேங்கிங்' வளையத்தில் கொண்டுவருவதற்காக ரூ.532 கோடியும் ஒதுக்குகிறார்கள்.
  இன்றைய அவசியத் தேவை, எல்லா கிராமங்களிலும் கிளை அலுவலகம் உள்ள அஞ்சல்துறையை முழுமையான வங்கிச் சேவைக்கு மாற்றுவதுதான். இதற்குத்தான் மிக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நிறுவனமயமாகிவிட்ட வங்கிகளுக்கு மேலும் ஊட்டச்சத்து தேவையா?

No comments:

Post a Comment